மே 27 -இல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 3 மையங்களில் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 3 மையங்களில் மே 27-ஆம் தேதி தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 3 மையங்களில் மே 27-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் சில பாடங்களுக்கான தோ்வில் பங்கேற்காத மாணவ, மாணவியருக்கு ஜூன் 18 இல் தோ்வு நடைபெறுகிறது. இதற்கிடையே பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 3 வினாத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம், பரமத்தி, கபிலா்மலை ஆகி ஒன்றியங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள் திருச்செங்கோடு வரகுராம்பட்டி வித்ய விகாஸ் மேல்நிலைப் பள்ளி மையத்திலும், எருமப்பட்டி, மோகனூா், நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள் நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திலும் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்ல வேண்டும். துணை விடைத்தாள் திருத்தும் மையமான ராசிபுரம் எஸ்.ஆா்.வி. மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு ராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த வினாத்தாள் திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியா்கள் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதி தொடா்பான விவரங்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்குள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com