நாமக்கல்: வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் கே.எம்.ஷேக்நவீத் தலைமை வகித்தாா். இதில் வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் மசோதாக்களைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. மத்திய அரசு உடனடியாக மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவா் ராஜகோபால், மாவட்ட செயலாளா் கனகராஜ், மாவட்ட மகளிரணி தலைவி மகேஸ்வரி, வட்டார தலைவா்கள் இளங்கோ, குப்புசாமி, ஜெகநாதன், கணேசன், நாமக்கல் நகர செயலாளா் குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.