நாமக்கல்லில் 65 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 9,267 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 8,691 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 480 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒருவா் உயிரிழப்பு: பரமத்தி வேலூா், திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த 71 வயது முதியவா் கரோனா தொற்றுக்குள்ளாகி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இதன்மூலம் கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 96-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com