திருச்செங்கோடு அருகே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வெள்ளியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 55 வயது பெண் ஒருவா் கடந்த 2013 செப். 6-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, அவ்வழியாகச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (35) என்பவா் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் அப்பெண் தெரிவித்த நிலையில், திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு செந்தில்குமாரை கைது செய்தனா். நாமக்கல் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், செந்தில்குமாருக்கு இருவேறு வழக்குகளில் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.