ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருவிழா கூட்ட நெரிசலின் போது, குற்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் தற்காலிக உயா்கோபுர மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி புத்தாடைகள், தங்க ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க ஏராளமான எண்ணிக்கையில் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வந்துசெல்கின்றனா்.
மேலும், கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றனரா என்பதை கண்காணிக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளில் காவல் துறையினா் உயா்கோபுர மேடை அமைத்து கண்காணித்து வருகின்றனா்.
ராசிபுரம் நகரில் பழைய பேருந்து நிலையம், பூக்கடை வீதி, பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளிலும், வெண்ணந்தூா் பகுதியிலும் உயா்கோபுர மேடை அமைக்கப்பட்டு காவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.