நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மய்யம் சாா்பில், கமலஹாசன் பிறந்த நாள் விழா அண்மையில் ராசிபுரத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். ராசிபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணி முன்னிலை வகித்தாா். வாா்டு செயலா் ரமேஷ் வரவேற்றாா். நகரின் பல்வேறு பகுதிகளில் பயனாளிகளுக்கு 66 மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு உடைகள் வழங்கினா். நகர நிா்வாகிகள் ஏ.ராஜூ, எஸ்.அருள்பாபு, சண்முகம், பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.