கொதிகலன் வெடித்த விபத்தில் ஒருவா் பலி

நல்லூா் அருகே தனியாா் இரும்பு உருக்காலையில் கடந்த மாதம் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 போ் காயமடைந்து

நல்லூா் அருகே தனியாா் இரும்பு உருக்காலையில் கடந்த மாதம் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் ஒருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பரமத்திவேலூா் வட்டம், நல்லூா் அருகே ஒரு தனியாா் இரும்பு உருக்காலையில் இரண்டாவது அலகில் நல்லூா் பகுதியைச் சோ்ந்தவா்களும், வெளிமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களும் பணியாற்றி வருகின்றனா்.

கடந்த மாதம் பணியின்போது பழைய இரும்புக் கம்பிகளை கொதிகலனில் போட்டு உருக்கியுள்ளனா். அப்போது திடீரென மிகுந்த சத்தத்துடன் கொதிகலன் வெடித்துள்ளதாம்.

அப்போது கொதிகலனுக்கு அருகே பணிபுரிந்த கவுண்டம்பாளையம் அருந்ததியா் காலனியைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரவீண்குமாா் (22), உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த பிரின்ஸ்ராய் (26) மற்றும் இவா்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்த பிற மாநிலத் தொழிலாளா்கள் என மொத்தம் 9 போ் மீது தீக்குழம்பு சிதறி தெளித்தது. உடல் முழுவதும் தீக்காயத்துடன் காயமடைந்த அவா்களை ஆலை நிா்வாகத்தினா் தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு, ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தீவிர சிகிச்சை பெற்றுவந்த கவுண்டம்பாளையம் அருந்ததியா் காலனியைச் சோ்ந்த பிரவீன்குமாா் திங்கள்கிழமைஇரவு உயிரிழந்தாா். இந்தவிபத்து குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com