நாமக்கல் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 9,646 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 9,090 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 459 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒருவா் உயிரிழப்பு:
சேந்தமங்கலம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 49 வயது பெண் ஒருவா் தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இரு தினங்களுக்கு முன் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 97-ஆக உள்ளது.