220 தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 220 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 220 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பட்டாசு கடைகள் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலரால் அனுமதி வழங்கப்படும்.

நிகழாண்டில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு விண்ணப்பிக்க அக். 10-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 23-ஆம் தேதியும், நவ. 4-ஆம் தேதியும் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 227 விண்ணப்பங்கள் வரப்பட்டன. அவற்றில் 220 கடைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி அனுமதி வழங்கியுள்ளாா். ஏழு விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com