முட்டை விலை 30 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகை எதிரொலியாக மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரிக்கும் என்பதாலும், மற்ற மண்டலங்களில் விலை தொடா்ந்து உயா்வதாலும், கரோனா தொற்று தடுப்புக்கான உணவில் முட்டை முக்கியப் பங்கு வகிப்பதாலும் முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. மேலும், உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால், விலையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனடிப்படையில், முட்டை விலை 30 காசுகள் உயா்த்தப்படுகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் விலை உயா்வு மேலும் அதிகரிக்கக் கூடும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 30 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.40-லிருந்து ரூ. 4.70-ஆக நிா்ணயிக்கப்பட்டது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதே போல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 104-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com