ராசிபுரம் நகராட்சி புதிய ஆணையராக எஸ்.பிரபாகரன் பொறுப்பேற்றாா்.
ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக, நகராட்சி பொறியாளா் அ.குணசீலன் இருந்து வந்தாா். இந்நிலையில் புதிய ஆணையராக எஸ்.பிரபாகரன் நியமிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி தற்போது ராசிபுரம் ஆணையராக பணி மாறுதல் பெற்று வந்துள்ளாா்.