நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்பாதை பராமரிப்புப் பணி காரணமாக நவ. 23-இல் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரியச் செயற்பொறியாளா் எஸ்.நாகராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்கவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.