நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா் சங்கத்தில் ரூ. 12 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். நாமக்கல், சேலம் மாவட்டப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்குக் கொண்டு வருவா்.
அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 750 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆா்.சி.ஹெச். ரகம் ரூ. 5,210 முதல் ரூ. 5,539 வரையில் ஏலம்போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. சேலம், ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள் அவற்றை கொள்முதல் செய்தனா்.