நாமக்கல் மாவட்டத்தில் 30 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 10,044 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 9,615 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 329 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 100 போ் உயிரிழந்துள்ளனா்.