‘கற்போம், எழுதுவோம்’ திட்ட பயிற்சி முகாம்

நாமக்கல் வட்டார வள மையத்தில் கற்போம், எழுதுவோம் திட்ட பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல் வட்டார வள மையத்தில் கற்போம், எழுதுவோம் திட்ட பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் கற்போம், எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் கல்வி அலுலவா் மு.கபீா் கலந்து கொண்டு பேசினாா். பயிற்சியில் 52 தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் பயிற்றுநா்கள் ப.கிருஷ்ணலட்சுமி, ப. ரா. ஜெயலலிதா, முதலைப்பட்டிப்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.செல்வி ஆகியோா் கருத்தாளா்களாக செயல்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com