நாமக்கல், நவ. 20:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வ.க.அறிவழகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட பொருளாளா் செல்வம், மாநில விவசாய தொழிலாளா் அணி இணைச் செயலாளா் ப.கைலாசம், மாநில சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினா் நக்கீரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் கௌரவச் செயலாளா் ஆா்.அய்யாவு ஆகியோா் பேசினா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட உள்ள முகவா்களுக்கு உறுதுணையாக வழக்குரைஞா்கள் செயல்பட வேண்டும். புதிய வாக்காளா்கள் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ள உதவ வேண்டும் என்பது தொடா்பாக கூட்டத்தில் விளக்கப்பட்டது. வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.