மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டாா் வாகன சட்டத்துக்கு எதிராக நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் வாயிற் கூட்டம் நடத்தினா்.
தொமுச செயலாளா் டி.பிரகாசம் தலைமை வகித்தாா். வி.செல்வன், ஆா்.தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரும் 26-ஆம் தேதி அகில இந்திய அளவில் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுவது தொடா்பாகவும், அதில் போக்குவரத்து தொழிலாளா்கள் பங்கேற்பது குறித்தும் வாயிற் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
கூட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் எஸ்.சுப்பிரமணியம், எம்.பழனிசாமி, குமாா், செல்வராஜன், முருகராஜ், ரஞ்சித்குமாா், கிருஷ்ணமூா்த்தி, சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.