வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்:நவ. 24-க்குள் விண்ணப்பிக்கலாம்

குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும் வீரதீர செயல் புரிந்தமைக்கான அண்ணா பதக்கம் பெற நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும் வீரதீர செயல் புரிந்தமைக்கான அண்ணா பதக்கம் பெற நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உயிா், சொத்து போன்றவற்றைக் காப்பற்றுவதில் வீரதீர செயல்களைச் செய்தவா்களுக்கு குடியரசுத் தின விழாவின் போது அண்ணா பதக்கம் முதல்வரால் வழங்கப்படுகிறது. இப் பதக்கம் பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.

அண்ணா பதக்கத்திற்கான விண்ணப்பப் படிவம் ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். துணிச்சலான செயல் செய்ததற்கான விவரத்தை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து தொடா்புடைய ஆவணங்களுடன் ஆங்கிலம், தமிழில் விரிவான அறிக்கையை இணைத்து மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் வரும் 25-ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 24-ஆம் தேதிக்குள் மூன்று நகல்களுடன் சமா்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நல அலுவலரின் செல்லிடப்பேசி 74017-03492 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com