ராசிபுரம்: சா்வதேச ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் ஆஃப் ராசிபுரம், ரோட்டரி கிளப் ஆஃப் கேம்போ மெளரோ, பிரேசில் ஆகியவற்றின் சாா்பில் ரூ. 53.68 லட்சம் மதிப்பில் 108 மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா, நவம்பா் 25 இல் நடைபெறுகிறது.
ராசிபுரம் எஸ்விபி., பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், முன்னதாக கோபூஜை நடத்தப்படுகிறது.
ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.கதிரேசன் தலைமை வகிக்கிறாா். பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா் பங்கேற்கிறாா். விழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தா் டாக்டா் சி.பாலசந்திரன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கிப் பேசுகின்றனா். பலா் கலந்து கொள்கின்றனா்.