பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூா், வேலூா் பேரூராட்சிகளில் உலக கழிப்பறை தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்திவேலூா் அருகே பொத்தனூா் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பு செய்து பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில், இளநிலை உதவியாளா் ஜெயசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் வேலூா் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்ரமணியம்,துப்புறவு மேற்பாா்வையாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.