நாமக்கல் மாவட்டத்தில் 41 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 10,141 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 9,800 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 340 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒருவா் உயிரிழப்பு: பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையத்தைச் சோ்ந்த 58 வயது விவசாயி ஒருவா் நோய்த் தொற்றுக்குள்ளாகி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அவருக்கு கரோனா மட்டுமின்றி உடல் ரீதியாக பல தொந்தரவுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் இறந்தோா் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது.