தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் சமய விழிப்புணா்வு பிரசாரம் நாமக்கல் நகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்துக்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இந்து இயக்கம் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனா். இப் பிரசாரமானது டிச. 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏற்கெனவே ஒன்றியப் பகுதிகளில் பிரசாரம் செய்த நிலையில், நாமக்கல் தில்லைபுரம், காமராஜ் நகா் பகுதிகளில் பாஜக பொறுப்பாளா்கள் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் பிரணவ்குமாா், அக்ரி இளங்கோ ஆகியோா் விழிப்புணா்வு புத்தகங்களை வழங்கினா்.