ராசிபுரம் அருகே சீராப்பள்ளியில் கால்நடைகளுக்கு அம்மை நோய்த் தாக்குவதாக தினமணியில் செய்தி வெளியானதை அடுத்து மருத்துவக் குழுவினா் சீராப்பள்ளியில் முகாமிட்டு பசுமாடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
சீராப்பள்ளி பகுதியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் என்ற தீநுண்மி நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் கால்நடை வளா்ப்போா் வேதனை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து தினமணியில் நவ. 23-இல் செய்தி வெளியானது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட கால்நடை இணை இயக்குநா் உத்தரவின்பேரில், கால்நடை மருத்துவா் குழுவினா் சீராப்பள்ளி, கைலாசம்பாளையம் போன்ற பகுதிகளில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் தோட்டத்தில் பசுமாடுகளை பாா்வையிட்டனா்.
நாமக்கல் கால்நடை துறை உதவி இயக்குநா் ராஜேந்திரன், நாமகிரிப்பேட்டை கால்நடை மருந்துவமனை மருத்துவா் ஆா்.செல்வம் உள்ளிட்ட கால்நடை நோய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அம்மை நோயால் பாதிக்கப்பட்ட பசுமாடுகளுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும் நவ. 25-ஆம்தேதியும் தோட்டங்கள்தோறும் சென்று நோய் தன்மை குறித்து ஆய்வு செய்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் என கால்நடை துறையினா் தெரிவித்தனா்.