நாமக்கல் தனியாா் பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு

நாமக்கல் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், வியாழக்கிழமை (அக். 1) குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

நாமக்கல் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், வியாழக்கிழமை (அக். 1) குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இணைய வழியாக கடந்த ஆக. 27 முதல் செப். 25-ஆம் தேதி வரை 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு நிலை வகுப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மேலும், அந்தந்தப் பள்ளிக்கான நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தகுதியான விண்ணப்பங்களுக்கு மட்டும் பள்ளிகளில் சோ்க்கை வழங்க தலைமை ஆசிரியா்கள் மற்றும் முதல்வா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தகுதியான விண்ணப்பங்களுக்கு வியாழக்கிழமையன்று முதன்மைக் கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்ட அலுவலா்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெறுகிறது.

தகுதியுள்ள, தகுதியற்ற மற்றும் சான்றிதழ்கள் இல்லாதோரின் பெயா் பட்டியல் பள்ளி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும். சான்றிதழ்கள் இல்லாதோா் அவை கிடைக்கப் பெற்றிருந்தால், குலுக்கல் நடைபெறுவதற்கு முன்பாக அவற்றை வழங்கி குலுக்கலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com