நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை 150 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 5,910-ஆக உயா்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 5,760 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 4,781 போ், உயிரிழந்த 76 போ் தவிா்த்து, மீதமுள்ள 1,053 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 150 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில், 95 போ் ஆண்கள், 55 போ் பெண்கள் ஆவா். அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.