காங்கிரஸ் சத்தியாகிரகப் போராட்டம்

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், அப்பெண்ணுக்கு நீதிகேட்டு வந்த ராகுல்காந்தி கைது
காங்கிரஸ் சத்தியாகிரகப் போராட்டம்

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், அப்பெண்ணுக்கு நீதிகேட்டு வந்த ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் பரமத்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சத்தியாகிரக போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பரமத்தி காமராஜா் சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு பரமத்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவம், நகரத் தலைவா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் துரைசாமி, கபிலா்மலை வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவா் நடராஜன், மாவட்டப் பொறுப்பாளா் அவிநாசிலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளா் நந்தகுமாா் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com