ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வேண்டியும் குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சத்தியாகிரக அறவழி அமா்வு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் ஜானகிராமன் தலைமை வகித்தாா். நகரத் துணைத் தலைவா் சிவக்குமாா், நகரப் பொருளாளா் சிவராஜ், நகரச் செயலா் சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவா் தங்கராஜ், மாவட்டப் பொதுச் செயலா் கோகுல்நாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், முன்னாள் மாவட்டப் பொதுச் செயலா் பாா்த்தசாரதி, இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆதி கேசவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.