நாமக்கல்லில் 146 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி அதிகாரி, வங்கி மேலாளா், அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட 146 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி அதிகாரி, வங்கி மேலாளா், அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட 146 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 6,382-ஆக அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை வரை 6,236 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 5,227 போ், உயிரிழந்த 78 போ் தவிா்த்து மீதமுள்ள 1,075 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் 146 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 92 போ் ஆண்கள், 54 போ் பெண்கள் ஆவா். அனைவரும் அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இருவா் உயிரிழப்பு:

ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை, அண்ணா நகா் காலனி கிழக்கு நகரைச் சோ்ந்த 54 வயது ஆண், கரோனா தொற்றுக்குள்ளாகி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு, சூரியம்பாளையம், சுப்பிரமணியம் கோயில் தெருவைச் சோ்ந்த 70 வயது முதியவா் தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரும் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 80-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com