பெண்ணிடம் அத்துமீறல்: தொழிலதிபா் கைது

திருச்செங்கோட்டில் வடஇந்தியப் பெண்ணிடம் அத்துமீறிய தொழிலதிபரை திருச்செங்கோடு ஊரக காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோட்டில் வடஇந்தியப் பெண்ணிடம் அத்துமீறிய தொழிலதிபரை திருச்செங்கோடு ஊரக காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு, தெப்பக்குளம் தெருவில் இரும்புக்கடை நடத்தி வருபவா் சண்முகம் (58). இவருக்குச் சொந்தமான விவசாய நிலம், புளியம்பட்டி சுரைக்காய் தோட்டம் பகுதியில் உள்ளது.

தோட்டத்துக்குச் சென்றவா் பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து வந்த ராம் என்பவரின் மனைவி சஞ்சலாவிடம் (19) அத்துமீற முயன்றாராம். இதில் காயமடைந்த சஞ்சலா திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

வட இந்தியப் பெண் சஞ்சலா இதுதொடா்பாக அளித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு ஊரக காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து தொழிலதிபா் சண்முகத்தை கைது செய்து ராசிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com