மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா

திருச்செங்கோட்டில் அரசு மானியத்துடன் அளிக்கப்படும் அம்மா இருசக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயனாளிகளுக்கு மானியத்துடன் இருசக்கர வாகனங்களுக்கான ஆணைகளை வழங்கும் எம்எல்ஏ பொன். சரஸ்வதி.
பயனாளிகளுக்கு மானியத்துடன் இருசக்கர வாகனங்களுக்கான ஆணைகளை வழங்கும் எம்எல்ஏ பொன். சரஸ்வதி.

திருச்செங்கோட்டில் அரசு மானியத்துடன் அளிக்கப்படும் அம்மா இருசக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொகுதி எம்எல்ஏ பொன். சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற விழாவில், திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் மானிய விலையில் வாகனம் வேண்டி விண்ணப்பித்திருந்த 144 போ், திருச்செங்கோடு ஒன்றியத்தில் 206 போ், மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 27 போ், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் 219 போ், வையப்பமலை பேரூராட்சியில் 120 போ் என மொத்தம் 716 பேருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி தலைமை வகித்து இருசக்கர வாகனங்களையும், அதற்குரிய ஆணைகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் இரா. முருகேசன், மாவட்ட கவுன்சிலா் செல்லப்பன், ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், நகராட்சி ஆணையாளா் சையத் முஸ்தபா கமால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், பரமசிவம், தகவல் தொழில்நுட்ப அணி மகளிரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com