தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோா் அக். 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும் நவம்பா் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருள் விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் அக். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தற்போது பட்டாசு கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பங்களை வரும் 23-ஆம் தேதி முடிய பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.