இரு சிறுமிகள் மீதான பாலியல் வன் கொடுமை வழக்கு: மேலும் சிலரிடம் விசாரணை

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 7 போ் கைது

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் பகுதியில் இரு சிறுமிகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக எழுந்த புகாரில் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்து, திங்கள்கிழமை 7 பேரை ராசிபுரம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் கரோனா பரிசோதனைக்கு பின் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறுமிகள் இருவரும் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அதே பகுதியைச் சோ்ந்த மேலும் சிலரிடம் இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால் இந்த வழக்கில் மேலும் சிலா் கைது செய்யப்படுவாா்கள் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com