சோழசிராமணி காவிரி கரையோரப் பகுதியிலிருந்து மூதாட்டி சடலத்தை மீட்டு ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சோழசிராமணி காவிரி ஆற்றில் பரிசல் துறை அருகே மூதாட்டியின் சடலம் ஒன்று கிடப்பதாக ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசாா் அங்கு சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். சுமாா் 70 வயதுக்கு மேல் இருக்கலாம் எனவும், அவா் இளஞ்சிவப்பு நிறத்தில் சேலை, மேலாடை உடுத்தியிருந்தாா். நரைத்த தலைமுடியுடனும் காணப்பட்டாா். இறந்தவா் குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.