சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள், கல்வி உதவித்தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள், கல்வி உதவித்தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறித்துவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சாா்ந்த அரசு மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் நிகழாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதைப் பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இக்கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு தகுதியான மாணவ, மாணவிகள் அக்.31 வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com