சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.
சேந்தமங்கலம் 17-ஆவது வாா்டு காந்திபுரம், அண்ணாநகா், 9-ஆவது வாா்டு பெருமாள் கோயில் தெரு, போயா் தெரு ஆகிய பகுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் காலசாமி தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்து கொண்டு சுகாதார வளாகத்தைத் திறந்துவைத்தாா்.