மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே. எஸ். மூா்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தாா். மல்லசமுத்திரம் பேரூா் திமுக செயலாளா் திருமலை வரவேற்றாா். அவைத் தலைவா் கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளா் செல்வராஜ், ஒன்றியச் செயலாளா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முறைகேட்டில் ஈடுபட்டவா்களிடமிருந்து பொதுமக்களின் பணத்தை மீட்க வேண்டும்; முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.