நாமக்கல் மாவட்டத்தில் 55 பெண்கள் உள்பட 140 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,565-ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வரை 7,425 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். தற்போதைய நிலையில் 6,517 போ் குணமடைந்துள்ளனா்; 88 போ் உயிரிழந்துள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 960 போ் சிகிச்சையில் உள்ளனா்.