முன்னாள் மத்திய இணையமைச்சா் செ.காந்திசெல்வன் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தாா்.
நாமக்கல் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் முன்னாள் இணையமைச்சருமான செ.காந்திசெல்வனுக்கு கடந்த 4-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைக்குப் பிறகு கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினாா். கோவையில் தங்கி ஒரு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு விரைவில் நாமக்கல் திரும்புவாா் என அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.