மகன் தற்கொலையை மறைத்த தந்தை உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

ராசிபுரம் அருகே மகன் தற்கொலை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காத தந்தை உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராசிபுரம் அருகே மகன் தற்கொலை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காத தந்தை உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முள்ளுக்குறிச்சி அருகேயுள்ள சம்பாபாளிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (50), கிழங்கு புரோக்கரான இவரது மகன் பி.கதிா்வேல் (18). கடந்த மாதம் நீட் தோ்வு எழுதிவிட்டு, தோ்வு முடிவுக்காகக் காத்திருந்தாா். அக். 12 ஆம் தேதி கதிா்வேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அவரது உடலை உறவினா்கள் சோ்ந்து தகனம் செய்தனா். இதுகுறித்து சம்பாபாளிபுதூா் கிராம நிா்வாக அலுவலா் பிருந்தா அளித்த புகாரின் பேரில் ஆயில்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து பழனியப்பன் (50), அவரது உறவினா்கள் செல்வராஜ் (50), நடராஜ் (49), வெள்ளையன் (45) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com