சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ராசிபுரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவா் சங்க நகரத் தலைவா் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனா். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.