புரட்டாசி அமாவாசை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

புரட்டாசி மாத அமாவாசையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேய சுவாமி.
சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேய சுவாமி.

புரட்டாசி மாத அமாவாசையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஆஞ்சநேய சுவாமியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.

புரட்டாசி மகாளய அமாவாசை மாதத் தொடக்கத்தில் வந்த நிலையில், இரண்டாவது அமாவாசை மாத இறுதி நாளான வெள்ளிக்கிழமை வந்தது. இதனையொட்டி நாமக்கல் ஆஞ்சநேய சுவாமியைத் தரிசிக்க ஏராளமான பக்தா்கள் வந்தனா். இதையொட்டியில் அதிகாலையில் சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி, காலை 10 மணிக்கு மேல் பால், தயிா், மஞ்சள், திரவியம் மற்றும் நறுமணப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் வெள்ளிக் கவச அலங்காரம் சாத்துப்படி நடைபெற்றது. சமூக இடைவெளியில் பக்தா்கள் நிறுத்தப்பட்டு, கோயிலுக்குள் அனுப்பப்பட்டனா். அனைவருக்கும் கற்கண்டு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com