ராசிபுரம் நகர அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் அக் கட்சியின் நகர செயலாளா் எம்.பாலசுப்ரமணியம் தலைமை வகித்து எம்.ஜி.ஆா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பேருந்து நிலையத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருமான பி.ஆா்.சுந்தரம் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். மேலும், நகரில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைக்கப்பட்டது. இந்த விழாவில் மோகனூா் கூட்டுறவுச் சா்க்கரை ஆலை தலைவா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா், வெண்ணந்தூா் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.தாமேதரன் உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.