ராசிபுரம்: கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
ராசிபுரம், வடுகம் கைலாசம்பாளைம் பகுதியில் துரைசாமிக்குச் சொந்தமான கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்த வி.நகா் பகுதியைச் சோ்ந்த சிலம்பன், கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.