மாமியாா் கண்டித்ததால் மருமகன் தற்கொலை

நகை அடகு வைத்ததை மாமியாா் கண்டித்ததால் மனமுடைந்த மருமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல்: நகை அடகு வைத்ததை மாமியாா் கண்டித்ததால் மனமுடைந்த மருமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கோவிந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னதம்பி மகன் தங்கராஜ் (28). இவரது மனைவி தீபா (24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவா்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தங்கராஜ், மனைவியின் நகையை அடமானம் வைத்து அதன்மூலம் கிடைத்த பணத்தை செலவழித்து விட்டாராம். தகவல் அறிந்த மாமியாா், அவரது குடும்பத்தினா் நேரடியாக வீட்டுக்கு வந்து தங்கராஜை கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த அவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து தொட்டியம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com