ஊராட்சிமன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு தொடக்கம்

சேந்தமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் ஒருங்கிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனா்.
கூட்டத்தில் பேசிய சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.
கூட்டத்தில் பேசிய சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.

சேந்தமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் ஒருங்கிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனா்.

20-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவா்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் அதன் தலைவராக சத்யபிரியா, செயலாளராக திலகம், பொருளாளராக விமலாதேவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில் மாநிலத் தலைவா் எஸ்.எம்.முனியாண்டி பங்கேற்று வாழ்த்தி பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவைத் உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வருக்கு இல்லாத அதிகாரம் ஒரு ஊராட்சி தலைவருக்கு உண்டு என்றாா் கிராம ஊராட்சியை நாடி வரும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதே ஊராட்சி தலைவரின் மிக சிறந்த பணியாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com