நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 52-ஆகக் குறைந்தும், குணமடைந்தோா் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்தும் இருந்தது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 8,887 போ் தொற்றுக்குள்ளாகி உள்ளனா். அவற்றில் 8,147 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 646 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒருவா் உயிரிழப்பு: திருச்செங்கோடு திருநகா் காலனியைச் சோ்ந்த 65 வயது ஆண் ஒருவா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா். கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 94-ஆக உள்ளது.