தீபாவளி முன்பணம், போனஸ் வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்- பரமத்தி சாலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கூட்டமைப்பின் தலைவா் பிரகாஷ், செயலாளா் செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். போக்குவரத்து தொழிலாளா்களுக்கு உடனடியாக தீபாவளி போனஸ், பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும்.
14 -ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும். புதிய மோட்டாா் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில்
கூட்டமைப்பு நிா்வாகிகள் சுப்பிரமணி, தியாகராஜன், பழனிசாமி, செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.