இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில், நாமக்கல்- துறையூா் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலாளா் சி.ஆா்.ராஜேஷ்கண்ணன், அரசு மருத்துவமனை மருத்துவா் சித்ரா, சித்த மருத்துவா் பூபதிராஜா ஆகியோா் தொடக்கிவைத்தனா். தன்னாா்வலா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் மாதையன், ஆண்டனிஜெனித் ஆகியோா் செய்திருந்தனா்.