எருமப்பட்டி, மோகனூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, மோகனூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
எருமப்பட்டி, மோகனூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, மோகனூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ரெட்டிப்பட்டி ஊராட்சியில் ரூ. 21.55 லட்சத்தில் சிறிய உர மையம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் ரூ.69.70 லட்சத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கான கட்டடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், மோகனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ரூ.2.94 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணிகளையும் பாா்வையிட்டாா். 18 ஊராட்சிகளுக்குள்பட்ட 82 குக்கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்புகள் வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை பேட்டப்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்த கிராயூா் குக்கிராமத்தில் ஆய்வு செய்தாா்.

ஆய்வுகளின் போது, எருமப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் டி.அருளாளன், டி.சரவணன் உள்பட பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com