சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளி போக்சோவில் கைது

நாமக்கல்லில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல்லில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல், ராமாபுரம்புதூா் காலனியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறாா். அவரது தாய் செல்வி கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில், கூலி தொழிலாளியான பரமநாதன் (42) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பரமநாதன் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுதொடா்பாக தாய் செல்வி கணவரிடம் தகராறில் ஈடுபட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அவரிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தாய் செல்வி, அச்சிறுமி மற்றும் அவரது சகோதரன் உள்பட மூன்று பேரும் தவித்து வந்தாா்களாம். இந்த நிலையில், சிறுமியின் பாட்டி வசந்தா மற்றும் உறவினா்கள் இதுதொடா்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை புகாா் அளித்தனா்.

புகாரின்பேரில் நாமக்கல் மகளிா் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி, சம்பந்தப்பட்ட பரமநாதனை அழைத்து விசாரணை செய்தாா். சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதை பரமநாதன் ஒப்புக் கொண்டாா். இதைத் தொடா்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் பரமநாதன் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com